சமையல் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய தடை- உயர்நீதிமன்றம்

சமையல் எண்ணெய் சில்லறைக்கு (பேக்கிங் செய்யாமல்) விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முந்திரி தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை சில்லறை விற்பனை செய்யக்கூடாது. … Continue reading சமையல் எண்ணெய் சில்லறைக்கு விற்பனை செய்ய தடை- உயர்நீதிமன்றம்