கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- தனிப்படை குழு அமைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடுஎஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 02) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை தொடங்கியது. … Continue reading கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- தனிப்படை குழு அமைப்பு