அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வேதனையுடன் கூறிய விவரம்.

Special Correspondent

வளர்ந்த மாநிலம் என்று சொல்லி மத்திய அரசு நமக்கான நிதியை குறைப்பு செய்கிறது. இருந்தாலும் மத்திய அரசிடம் நாங்கள் கேட்டு பெறுவோம். 15-வது நிதிக்குழு தமிழகத்தின் பங்கை திருப்பி தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்தியாவிலேயே சட்டம்- ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழகம் தான். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருப்பது குறித்து கேட்கிறீர்கள். அவரின் இந்த கருத்து ஜமுக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் கூறினார்.

ஓ. பன்னீர்செல்வம் பேட்டியை கண்ட முக்கிய பாஜக பிரமுகர் "ராஜஸ்தானில் இடை தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்கு வித்யசாத்தில் பாஜக படுதோல்வி அடைந்து இருந்தது முதல் அதிமுகவினர் போக்கு மாறி விட்டது" என்று நம்மிடம் கருத்து தெரிவித்தார்.

பாஜக மோடி அரசை எதிர்க்கும் அதிமுக...மேலும் தகவலுக்கு