மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகளில் 600 -க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
 
வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த போட்டியில் 47 வீரர்கள் காயம் அடைந்தனர்.
 
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழர் சிறப்பு திருநாளில் காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதை
குறிக்கும் விதமாக மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
 
அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நீதிமன்றம் விடுத்த கொள்கை கோட்பாடுகள் படி உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
 
ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 504 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
 
இதில் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தன. காளைகளுக்கும், வீரர்களுக்கும் காயம் ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
 
பார்வையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முன்னதாக போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் மருத்துவ குழுக்கள் பரிசோதனை செய்தன.
 
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் காலை 8.15க்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்து உள்ளது.
 
ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 8 சுற்றுகள் நடந்தன. இந்த போட்டியில் 47 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பு மக்கள் அதிகம் உள்ள பீடா (PETA)  அமைப்பு ஜல்லிக்கட்டு நடக்கும் முறையை வேவு பார்த்தாகவும் மாடு பிடி வீரர் மகேஷ் மற்றும் நண்பர்கள்  நமது செய்தியாளரிடம் தெரிவித்தார்கள்