கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை செய்துகொண்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “ஒன்றிய ஆயுதப்படை காவல்துறை அளித்த தரவுகளின் படி, கடந்த ஆறு ஆண்டுகளில் 680 துனை ராணுவப்படையினர் தற்கொலை செய்துள்ளனர்.

இவர்கள் குடும்ப பிரச்சனையாலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், பொருளாதார சிக்கலினாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தகுந்த ஆலோசனைகளை நிபுணர்களை கொண்டு அவ்வபோது அரசு கவுன்சிலிங் வழங்கி வருகிறது. அதேபோல் விபத்துகளில் 1,764 பேரும், என்கவுண்டரில் 323 ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு, 2019 ஆம் ஆண்டில் மட்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1948 பேர் கைது செய்துள்ளதாகவும், இதில் 34 பேர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

ராணுவ தளவாட துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் மசோதா நிறைவேற்றம்: ஒன்றிய மோடி அரசு