4 இயக்குனர்கள், 4 கதைகளை கொண்டு ‘விக்டிம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆந்தாலஜியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் சின்ன குழு, ஒரே இடத்தில் படப்பிடிப்பு, குறைந்த நாட்களில் படப்பிடிப்பு நிறைவு என ஒவ்வொரு முன்னணி இயக்குநர்களுமே ஆந்தாலஜி கதையில் களமிறங்கியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’ ஆந்தாலஜிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து OTT தளத்துக்காக 2 ஆந்தாலஜிக்கள் தயாராகி வருகிறது. வேல்ஸ் நிறுவனம் ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜியை தயாரித்துள்ளது.

இந்நிலையில், வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் இணைந்து ‘விக்டிம்’ என்ற பெயரில் ஆந்தாலஜியை உருவாக்கியுள்ளனர். வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி தயாரித்துள்ள இந்த 4 கதைகளுமே ஒரே கருவைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் பிரசன்னா, அமலா பால், கிருஷ் ஆகியோரும், ராஜேஷ் இயக்கத்தில் நடராஜ், பிரியா பவானி சங்கரும், சிம்பு தேவன் இயக்கத்தில் நாசர், தம்பி ராமையா மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்துள்ளார். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்; ரசிகர்கள் இரங்கல்