3வது முறையாக சரத்குமார், ராதிகா இருவரும் தற்போது இயக்குனர் மணிரத்னம் படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனரும் படை வீரன் படத்தின் இயக்குனருமான தனா அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் கணவன் மனைவியானக சரத்குமாரும், ராதிகாவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது. சரத்குமார் நடிப்பில் அடங்காதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.

இதுவரை நடித்த படங்களில் சரத்குமாரும், ராதிகாவும் ‘நம்ம அண்ணாச்சி’, ’சூர்ய வம்சம்’ ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே கணவன் மனைவியாக நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக 22 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.