2019ல் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக கமல்ஹாசன் தொிவித்துள்ளாா்.

தனது 6 வயதில் களத்தூா் கண்ணம்மா படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறாா். தமிழ் சினிமா வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கமல்ஹாசன் சமீபத்த்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பா் ஹிட்டான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் தயாராக உள்ளது. தற்போது படத்திற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கும் வேலையையும் தொடங்க இருப்பதாக ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவெண்டி டுவெண்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக கேரளா சென்றுள்ள கமல், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், “2019ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள். தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன்.

நான் நடிக்க மாட்டேன் என்றாலும் எனது பட தயாரிப்பு நிறுவனம் தொடா்ந்து செயல்படும். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளிலும் அது தொடா்ந்து ஈடுபடும். கேரள மற்றும் ஒடிசா முதல்வர்களைச் சந்தித்தேன். அவர்களின் திட்டங்களை தமிழகத்திலும் பிரதிபலிப்பேன். மக்கள் நலன் என்று வரும்போது மதசாா்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்” என்றும் தொிவித்துள்ளாா்.