விவசாயிகள் பேரணிக்கு தி.மு.க. தனது ஆதரவு தெரிவித்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விவரம் வருமாறு :

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் (பி.ஏ.பி) கீழ் தமிழக விவசாயிகளின் கனவுத் திட்டமான “ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை” நிறைவேற்றவும்,

“அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நீராறில் இருந்து கேரளாவிற்கு திறந்து விடப்பட்டும் தண்ணீரை நீறுத்தக் கோரியும்” பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் சார்பில் திருப்பூரில் 15-ந்தேதி அன்று நடைபெற இருக்கும் “மாபெரும் கவன ஈர்ப்பு எழுச்சிப் பேரணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தப் பேரணியில் பெருமளவில் திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வராகவும் தெரிவித்தார்.

மேலும் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 29.05.1970 அன்று போடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பின்தேதியிட்ட ஒப்பந்தம் பரம்பிக்குளம் ஆழியாறு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் .

பல நதிகளை இணைக்கும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஆனைமலையாறு திட்டத்தினால், தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். அது கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமைக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் .

இத்திட்டத்தை நிறைவேற்ற, கழக ஆட்சியில் 21.01.2011 அன்று, இருமாநில தலைமைச் செயலாளர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அ.தி.மு.க ஆட்சியில் கடந்த ஏழு வருடங்களாக ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை என்பது வேதனைக்குரியது எனவும் .,

இந்நிலையில் பி.ஏ.பி. விவசாயிகள் சார்பாக நடத்தப்படும் இந்த “மாபெரும் எழுச்சிப் பேரணி” தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசை நிச்சயம் தட்டி எழுப்பும் என ஸ்டாலின் தெரிவுத்துள்ளார்