சென்னையில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரும், வட வடசென்னை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழு உறுப்பினரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 10 ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கூறி 8 பேர் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை மகளிர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஸ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரும் கடந்த 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மதன் குமார், ஷாகிதா பானு, செல்வி மற்றும் சந்தியா ஆகிய 4 பேரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும், இவர்கள் 4 பேரும் சிறுமிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஸ்வரி (எ) மகா, வனிதா, விஜயா ஆகியோரை கடந்த 16ஆம் தேதி போலிஸ் காவலில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு உடந்தையாக முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

[su_image_carousel source=”media: 19257,19258″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

மேலும் விசாரணையில், வட சென்னை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருபான வண்ணாரப்பேட்டை எம்.சி சாலை ஜெகநாதன் தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ராஜேந்திரனை கைது செய்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி தனது அலுவலகத்திலேயே வைத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்தார்.

இதனால் எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாஜ செயற்குழு உறுப்பினரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையே இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் போலீஸ் சட்டம் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு; நெருக்கடியில் பினராயி விஜயன்