திமுகவில் பிளவு எற்படும் என்று அழகிரி எதிர்ப்பை காரணம் காட்டி பல்வேறு செய்தி ஊடகங்கள் செய்தி வெளிட்ட நிலையில் அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதத்தில் எந்த எதிர்ப்பும் இல்லமால் கட்சி தலைவர் பதவிக்கு போட்டி இன்றி மு.க ஸ்டாலின் தேர்ந்து எடுக்கப்பட்டார் .

தேர்ந்து எடுத்த பின்னர் என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே என்று திமுக தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். உடன்பிறப்புகளே என்றவுடன் கரவோஷம் மிக அதிகமாகியது

அவரின் முதல் கன்னி பேச்சின் விவரம் பின்வருமாறு ” பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் போல எனக்குப் பேசத் தெரியாது. பேசவும் முடியாது. ஆனால் எதையும் முனைந்து செயல்படுத்தும் துணிவு உண்டு.

இன்று நீங்கள் கேட்கும் பார்க்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாக பிறக்கிறேன். இது வேறொரு நான். திராவிட இயக்க மரபணுக்களோடு, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடு நான் பிறந்திருக்கிறேன். என்னுடன் பிறந்திருக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகள். என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே நீ இல்லாமல் என் கனவுகளை மெய்ப்பிக்க முடியாது.

வா.. என்னோடு கை கோர்க்க வா. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசை தூக்கி எறிய வா.

தந்தை பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதை-பெற்றுத் தந்த சமத்துவத்திலிருந்து ஒரு போதும் நாம் பின்வாங்கப் போவதில்லை.
நான் முன்னே செல்கிறேன்.. நீ பின்னே வா என அழைக்கவில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என அழைக்கிறேன்.

மூத்தவர்கள் எல்லோரும் என் அண்ணன்கள், அக்காக்கள். இளையவர்கள் எல்லோரும் என் தம்பிகள், தங்கைகள். இதுதான் என் குடும்பம். நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்.

என் கடைசி மூச்சு உள்ளவரை, என் கடைசி இதயத்துடிப்பு உள்ளவரை என் உயிருடன் கலந்த தமிழினமே உனக்காக உழைப்பேன்.
என ஸ்டாலின் பேசி முடித்தவுடன் பொதுக்குழு உறுப்பினர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்

மேலும் முறைப்படி ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்து எடுக்கபட்ட பின்னர் தமிழகமெங்கும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.