வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் 57 நாட்களாக கடும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஏற்கனவே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் எனத் தெரிவித்து விட்டது.

ஆனால், வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப்பெறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறி, போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

[su_image_carousel source=”media: 21636,21637″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று (ஜனவரி 20) 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய மந்திரியின் யோசனை குறித்து விவசாயிகள் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்