இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேர்த்தியான விளையாட்டை முன்னெடுத்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. பிஷூ (22), ரோச் (26) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சகால் 3, ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களமிறங்கினர். தவான் 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்த ரோகித் அதிரடியாக விளையாட இருவரும் சதம் அடித்தனர்.

கேப்டன் விராத் கோலி 140 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இறுதியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 326 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 152 ரன்களுடனும், அம்பத்தி ராயுடு 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

WI : 322 /8 ( 50 ஓவர்கள்)
IND 326/2 (42.1 ஓவர்கள்))
இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது
சிறந்த விளையாட்டு வீரை : விராத் கோலி