உலகத்தையே உலுக்கிய லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள கிடங்கில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் தற்போது வரை 75 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 4000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இரவு (ஆகஸ்ட் 04) வெடி விபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரில் இருக்கும் கிடங்கு ஒன்றில் தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிடக்கு, துறைமுகத்தில் இருந்து வரும் பொருட்களை வைப்பதற்காக பயன்படும் பகுதியாகும்.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு இந்த கிடங்கிற்கு மொத்தம் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் பார்சல் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளது. லெபனான் கடல் பகுதிக்கு அருகே 2013ல் இந்த பார்சல் வந்த போது, கடலில் ஏற்பட்ட காற்று காரணமாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், லெபனான் அரசு அனுமதியோடு இந்த ரஷ்யாவின் கப்பலை பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தி உள்ளனர். அதன்பின் இந்த கப்பலை மீண்டும் துறைமுகத்தில் இருந்து அனுப்ப லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கிடங்கில் வைத்து பின் பணம் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் அறை எண் 12ல் வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் இந்த அம்மோனியம் நைட்ரேட்டை அங்கு யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால், கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீண்டும் அதன் உரிமையாளருக்கே விற்க முயன்று, அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

[su_image_carousel source=”media: 16417,16416″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

இதையடுத்து அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் 2014, 2015, 2016, 2016 (மீண்டும்), 2017, 2018 என்று 6 முறை கடிதம் அனுப்பி, இந்த அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை என்ன செய்வது என்று கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொருமுறை இதை மக்களிடம் விற்றுவிடுங்கள், ராணுவத்திற்கு விற்றுவிடுங்கள், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு விற்று விடுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

கடைசியாக எழுதிய கடிதத்தில், அம்மோனியம் நைட்ரேட் மூட்டைகளை யாரும் வாங்கவில்லை. இதை பாதுகாப்பாக வைக்கும் வசதி எங்களிடம் இல்லை. இதனால் இதற்கு தக்க வழியை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு நீதிபதிகள் குழுவில் இருந்து பதில் வரவே இல்லை. இதன்பின் அந்த அம்மோனியம் நைட்ரேட் விஷயத்தை அப்படியே கஸ்டம்ஸ் குழுவும் மறந்துவிட்டது.

ஆனால் அம்மோனியம் நைட்ரேட் என்பது மொத்தமாக குவிக்கப்பட்டு இருந்தால் வெப்பத்தை வெளியிடும். அதேபோல் வருடம் செல்ல செல்ல வெப்பம் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் மொத்தமாக இந்த அம்மோனியம் நைட்ரேட் நெருப்பை உருவாக்கும் திறன் கொண்டது.

பல வருடங்களாக மொத்தமாக ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததால் அழுத்தம் அதிகரித்து வெப்பம் வெளியாகி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பெய்ரூட் பகுதியில் 200 கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளது. மொத்தமாக பெய்ரூட் நகரத்தை இந்த வெடிப்பு சிதைத்து சின்னாபின்னமாக்கி உள்ளது. பெய்ரூட் துறைமுகம் மொத்தமாக நொறுங்கி உள்ளது.

[su_image_carousel source=”media: 16418,16419″ crop=”none” columns=”2″ autoplay=”2″ image_size=”medium_large”]

ஹிரோஷிமா, நாகசாகி போல இதுவும் மோசமான சம்பவம் என்று அந்நாட்டு அரசு இதை வர்ணித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட விஷவாயு பரவல் காரணமாக இன்னும் பலர் பலியாக வாய்ப்புள்ளது என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. பெய்ரூட் வெடிப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அம்மோனியம் நைட்ரேட் வைத்து இருந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் லெபனான் பிரதமர் ஹாசன் டியாப் தெரிவித்துள்ளார்.