அண்மையில் வெளியான விஸ்வாசம் படத்தில் நடிகா் அஜித் சமூக பொறுப்பை உணா்ந்து சாலை விதிகளை மதிக்கும் வகையில் படக்காட்சிகளில் நடித்திருப்பதாக காவல்துறை துணைஆணையா் சரவணன் பாராட்டு தொிவித்துள்ளாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி நடிகா் ரஜினிகாந்தின் பேட்ட, நடிகா் அஜீத்தின் விஸ்வாசம் படங்கள் திரைக்கு வந்தன. இரு படங்களின் விமர்சனம் மற்றும் வசூல் தொடர்பாக நோ்மறையான கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நடிகா் அஜீத்தின் விஸ்வாசம் படம் குடும்பத்துடன் சென்று பாா்க்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக ரசிகா்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறை துணைஆணையா் சரவணனும் விஸ்வாசம் படம் குறித்து பாராட்டு தொிவித்துள்ளாா். துணைஆணையா் சரவணன் இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் நடிகர், நடிகை இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.,

கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது., தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது., பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.,

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குனர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளாா்.