டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தனது பத்ம விபூசன் விருதை முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் திருப்பி வழங்கியுள்ளாது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசின் வெத்து உத்தரவாதங்களை விவசாயிகள் நிராகரித்து போராட்டத்தைத் வலுப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், பாஜகவின் நம்பிக்கைக்குரிய நீண்ட கால கூட்டணி கட்சியான பஞ்சாப் மாநில சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவரும், எம்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல், விவசாயிகளுடன் தனது ஒற்றுமையைக் காட்ட தனது பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்துக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசில், சிரோமணி அகாலிதளம் கட்சியும் இடம்பெற்றிருந்தது. மக்களவையில் இரண்டு இடங்களைக் கொண்ட சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக இருந்து வருகிறார்.

மற்றொரு உறுப்பினரான அவரின் மனைவி ஹர்சிம்ரத் கௌர் பாதல், மோடி அரசில் உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக இருந்தார். வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பஞ்சாபைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை திரும்ப வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் கத்தார் சிங், அர்ஜுனா விருது பெற்ற குருமெயில் சிங், முன்னாள் ஹாக்கி கேப்டன் ராஜ்பீர் கவுர், அர்ஜுனா விருது பெற்ற கூடைப்பந்து வீரர் சஷன் சிங் ஆகியோர் விருதுகளை திரும்பப் தரப்போவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து மேலும் பல விளையாட்டு வீரர்கள் விருதுகளை திரும்ப வழங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு வழங்கிய மதிய உணவு, தேநீரை ஏற்க மறுத்த விவசாய பிரதிநிதிகள்