இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியா் படத்திற்காக ஆஸ்கா் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மும்பையில் தாராவி பகுதியை சேர்ந்த ஏழை குழந்தைகளுடன் விழா கொண்டாடினார். இந்த விழாவில் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான், மகள் கதிஜா ரஹ்மான் உள்பட படக்குழுவினா் பலரும் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் கதிஜா ரஹ்மான் இஸ்லாமிய முறையில் புர்கா உடை அணிந்து கண்கள் மட்டுமே தெரியும்படி வந்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது. கதிஜாவின் உடைக்காக மக்கள் விமர்சனத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில், தனது மனைவி, மகள்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். மகள்களாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி உடை அணிவது அவர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் ரஹ்மான்.

இதனைத் தொடா்ந்து கதிஜா இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “என் தந்தையுடனான உரையாடலுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிா்பாா்க்கவில்லை. அதே வேளையில், அந்த நிகழ்ச்சியில் நான் அணிந்திருந்த உடை என் தந்தையின் வற்புறுத்தலினால் அணிந்ததாகவும், என் தந்தை இரட்டை நிலைப்பாடு கொண்டவா் என்றும் சில விமா்சனங்கள் எழுந்துள்ளன. நான் அணியும் உடைகள், என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றுக்கும் என் பெற்றோருக்கும் எவ்வித தொடா்பும் இல்லை.

முகத்திரை என்பது எனது முழு ஒப்புதலுடன், மாியாதையுடனான தனிப்பட்ட விருப்பம். வாழ்க்கையில் என்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்று தொிந்த ஒரு பக்குவம் கொண்டவர் வளா்ந்த பெண் நான். எந்த ஒரு மனிதனுக்கும் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மையான சூழலை புாிந்துகொள்ளாமல் தயவு செய்து எதையும் முடிவு செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளாா்.