பொதுத்துறையைச் சேர்ந்த அரசின் கட்டுபாட்டில் உள்ல யூகோ வங்கிக்கு முதல் காலாண்டில் ரூ.633 கேடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் இழப்பு ரூ.663.02 கோடியாக காணப்பட்டது.

வருவாய் ரூ.4,237.04 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.4,360.88 கோடியாக காணப்பட்டது. ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 19.87 சதவீதத்திலிருந்து அதிகரித்து 25.71 சதவீதத்தை எட்டியுள்ளது. நிகர அளவிலான வாராக் கடன் 10.63 சதவீதத்திலிருந்து உயர்ந்து 12.74 சதவீதமாக காணப்பட்டது.

வாராக் கடன் அதிகரிப்பையடுத்து அதற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,204.25 கோடியிலிருந்து கணிசமாக உயர்ந்து ரூ.2,038.33 கோடியானது என யூகோ வங்கி செபி-க்கு தெரிவித்துள்ளது.