உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் முடங்கியதால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகளவில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பல கோடிக் கணக்கானோர் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் பல நாடுகளில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சமூக வலைதளங்கள் முடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டு, விரைவில் சேவை தொடங்கும் என்று பேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.