மத்திய பாஜக அரசின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஃபேஸ்புக் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பஜ்ரங்தள் வன்முறைகளை தூண்டுகிறது என ஃபேஸ்புக்கின் உள் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பஜ்ரங்தள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பஜ்ரங்தள் மீதான ஃபேஸ்புக் நிறுவனத்தின் அச்சமே காரணம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பஜ்ரங்கள் அமைப்பினர் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தினர். பஜ்ரங்தள் வெளியிட்ட மதவெறுப்பு நிறைந்த அந்த வீடியோ 2.5 லட்சம் பார்வைகளைப் பெற்றும் ஃபேஸ்புக் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுத்தால், இந்தியாவில் தமது நிறுவன ஊழியர்களுக்கும், தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதாலேயே ஃபேஸ்புக் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, பாஜகவினரின் பதிவுகளையோ, கணக்குகளையோ நீக்கினால் இந்தியாவில் தொழில் செய்வதில் பிரச்னை ஏற்படும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஃபேஸ்புக் இந்திய பொதுகொள்கை பிரிவு தலைவர் அங்கி தாஸ் கூறியதாக தகவல் வெளியானது. பின்னர் பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

இருப்பினும், ஆளும் பாஜக அரசின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஃபேஸ்புக் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள்