கொரோனா பரவல் மற்றும் இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.