தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வாடும் 2.11 கோடி ரேசன் கார்டு பயனாளர்களுக்கு, 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் பாதிப்பு முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 30,000ஐ கடந்து செல்கிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் தழுவிய சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாளை மறுதினத்தில் இருந்து ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஜூன் மாதமும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வாடும் 2.11 கோடி ரேசன் கார்டு பயனாளர்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம் உள்ளிட்ட 13 மளிகை பொருட்கள் ஜூன் 3 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பாதிப்பு குறைய 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ICMR