சமீபகாலமாக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் சினிமாவாய்ப்புக்காக பலரும் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என கூறி நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அலாவுதீன் இயக்கத்தில் தித்தர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் ரவிதேவன், ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச்செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ரெட்டி டைரி.

இப்படம் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை போராட்ட சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏற்கனவே இத்திரைப்படத்திற்கான காட்சிகள் ரகசிய கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் படத்திற்காக உபயோகப்படுத்தப்படும் என்று இயக்குநர் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீ ரெட்டி, “தன்னை ஏமாற்றியவர்களின் வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அதை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இப்படம் எடுக்க நடிகர் சங்கம் ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும் திரைபிரபலங்கள் மீதான தனது குற்றச்சாட்டு தொடரும் என்றும் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இப்படத்தில் இடம் பெறுமென்றும் கூறினார்”.

மேலும் : ஸ்ரீரெட்டியின் பரபரப்புகள்.. சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும்..