வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.
 
மராட்டியம், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடும் வறட்சிக்கு ஆளாகின.
 
இமாசலபிரதேசம் கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்கு ஆளானது. உத்தரபிரதேச மாநிலத்தில் மழை, வெள்ளம் காரணமாக பாதிப்பு நேரிட்டது.
 
புதுச்சேரி புயலினால் பாதிக்கப்பட்டது. இப்படி இயற்கை பேரிடரின் பிடியில் சிக்கி பாதிப்புக்கு ஆளான மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.
 

தமிழக அரசும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களின் நிவரண நிதியாக 15000 கோடி கோரி இருந்த நிலையில்
 
இதனையடுத்து இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மட்டும் மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.
 
மாநிலங்களின் கோரிக்கை தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு கூடி, பரிசீலித்து நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது. அதன்படி வறட்சி பாதித்த
 
மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம்,
கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம்,
ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம்,
குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் ,
இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம், உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம்
புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் நிதி தரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் தமிழ் நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட வழங்காததை கண்டித்து பலரும் சமூக வலைதளத்தில் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர் . அதில் உலக அளவில் gobackmodi ஹாஷ்டாக் முதலாவதாக கொண்டு வந்த காரணத்தில் தான் மோடி அரசு தமிழர்களை திட்டம் போட்டு பழி வாங்குவதாகவும் அதில் வருத்தமுடன் தெரிவித்து இருந்தனர்