தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கு ரஜினி ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்ததாகவும் அது இப்போது நிறைவேறியிருப்பதாகவும், த்ரிஷா தெரிவித்துள்ளார்.

காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை மெர்க்குரி, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் 40 நாட்கள் மட்டுமே நடிக்கும் ரஜினிகாந்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதற்கு நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “சில நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் கனவில் தான் இருப்பது போல இருக்கும்”, என குறிப்பிட்டுள்ளார்.