எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிய் ரஃபேல் ஊழல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்தியஅரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

இதில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரங்கள் என்று தலைப்பிட்டு அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான விதிமுறைகள் – 2013 அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் வாங்குவதற்கான ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஃபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்திய விமானப் படையின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அரசு முடி வெடுத்தது. இதற்காக பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியதாகச் எதிர் கட்சிகள் குற்றம் சுமத்தின .

இந்நிலையில், 30 ஆயிரம் கோடியும் டிஆர்ஏஎல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

ஆனால் ரிலையன்ஸ் குழுமம் கடந்த செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் ரூ. 6,600 கோடி முத லீடு பெறப்பட்டதாக அறிவித்தது. இந்த நிலையில் ரிலை யன்ஸ் குழுமத்தின் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்டுள்ளது.

ஆனால், 2017-18 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் இதுகுறித்த விவரங்கள் எதுவும் இல்லை அப்படி என்றால் 2016-17 நிதி ஆண்டுக்கான அறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக காட்டப்பட்ட பணம் எங்க போனது என்ற கேள்விக்கு டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட் வழக்கு என்ற வரும் போது பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிறார்கள்  நிதி துறை வல்லுனர்கள்.

அனில் அம்பானி வாழ்நாளில் ஒரு விமானம் கூட தயாரித்ததில்லை. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. ஆனால் அனில் அம்பானிக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனம் 78 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒப்பந்தம் எற்ப்படுகிற அன்று அனில் அம்பானியின் நிறுவனம் 12 நாட்கள் மட்டுமே செயல்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எற்கனவே உச்ச்நீதிமன்றம் ஒப்பந்த் வழிமுறைகளை மத்திய மோடி அரசிடம் கோரிய நிலையில் இப்போது ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டு பங்காக 2016-2017 நிதி ஆண்டுக் கான அறிக்கையில் காட்டபட்டது ஊழல் ஆதாரத்தை மேலும் வெளிச்சம் போட்டு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.