தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் பிக் பாஸ் பட்டத்தை ரித்விகா தட்டிச்சென்றார்.

வெற்றி பெற்ற ரித்விகா கூறுகையில், “வாழ்க்கையில முதல் முறையாக முழுமையான வெற்றியை அடைஞ்சிருக்கிறேன். முகம் தெரியாத எத்தனையோ மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறீர்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்றார்.

இவரைத் தொடர்ந்து 2வது இடம் பிடித்த ஐஸ்வர்யா தத்தா கூறுகையில், “தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி. யாஷிகா இல்லை என்றால், இந்த வீட்டில் நான் இருந்திருக்க மாட்டேன். மேலும், எனக்கு மஹத், ஷாரிக் மற்றும் மும்தாஜ் ஆகிய 3 நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தோழிகளான ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகா ஆனந்தும் இணைந்த பாடிக் கொண்டே ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனவர். ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள யாஷிகா, இந்தப் பாடலை தாங்கள் சொந்தமாக உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளர். மேலும் அதில் ஐஸ்வர்யாவுடன் நடனமாடிக் கொண்டே, “நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு” என பாடி உள்ளார்.

மேலும் யாஷிகா பதிவிட்ட குறிப்பில், “ஐஸ்வர்யாவுடன் ஃபன் பண்றேன். ரொமாண்டிக் பாடல் ஃபன் ஆந்தமாக மாறிய தருணம். உங்களுடைய சிறந்த நண்பர்களை டேக் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.