மெரினாவில் உரிமம் இல்லாமல் செயல்படும், 2000 கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதிகள் உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் லைசென்ஸ் கொடுங்கள் என அறிவுறுத்தினர்.
 
மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை, பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.