கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சேலம் ஆவின் பால் விற்பனை மையங்களில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், தற்போது பால்வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. இதேபோல விற்பனையும் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. பால்விலை குறைப்பால் அரசுக்கு 270 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் சத்துணவு மையங்களில் பால் உணவை சேர்ப்பது குறித்து முதல்வர் முடிவெடிப்பார் என தெரிவித்த அமைச்சர், பால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்வதன் மூலம் குறைகள் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் தெரிய வருகிறது.

பால் விற்பனையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் 234 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சேலம், தேனி, மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பண்ணையில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

https://www.facebook.com/savenra/posts/6635339443158589

ஆதரவற்றோர் காப்பகம் பெயரில் குழந்தைகள் கடத்தல்; இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் கைது!