மாற்று மதத்தினரை பற்றி முகநூலில் அவதூறாக செய்தி பதிவிட்டதாக முன்னாள் ஆர்எஸ்எஸ் மற்றும் பிரபல ரவுடி போல பேசி திரியும்  பாஜக நிர்வாகியும் ஆன கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இந்த செய்தி பாஜகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம் . 
 
சென்னை விமானநிலையத்தில் கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் இன்று அவரை கைது செய்தனர்.  பிரபல ரவுடி போல பேசி திரியும் கல்யாணராமனை கைது செய்த விவரம் தெரிந்தவுடன் பலரும் சமூகவலை தளத்தில் காவல் துறைக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர் ..அடுத்த கைது காவல் துறை அதிகாரிகளை மிகவும் கேவலமாக பேசிய  பாஜக அகில இந்திய செயலாளர்   எச் ராஜா ஷ்ர்மா தானே என்றும் கேட்டுள்ளனர் ..