சமீபத்தில், சென்னையில், திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், அவருடன் செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். இதில், அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு வருத்தம் தெரிவித்திருந்த சிவகுமார், தான் தட்டிவிட்டதற்கான காரணத்தையும் அப்போது கூறியிருந்தார். மேலும், அந்த இளைஞருக்கு புதிய மொபைல் போனையும் வாங்கி கொடுத்தார். அதோடு, அந்த சர்ச்சை முடிந்த நிலையில், தற்போது மீண்டும் செல்ஃபி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இதற்கு நெட்டிசன்கள் இன்னும் எத்தனை செல்போன்களைத் தான் இவர் பறக்கவிடுவாரோ.. யாரேனும் புதிய மொபைல் போன் வாங்க நினைத்தால் சிவக்குமாரை செல்ஃபி எடுங்கள். உடனே புதிய மொபைல் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.