தமிழகத்தில் இன்று (மே 17) முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு நடைமுறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதன்படி, மே 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.

ஆனால், இ-பதிவை, இ-பாஸ் என்று தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், இ-பாஸ் மற்றும் இ-பதிவு குறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதில், “மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயணம் செய்ய இ-பதிவு மட்டும் செய்தால் போதும்.

மேலும், பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்” ” எனக் கூறியுள்ளது

அதாவது இ-பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். ஆனால், இ-பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பது தான் இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டிய விவகாரம்; 25 பேர் அதிரடி கைது

85