நடிகர் மாதவன் தற்போது நடித்து வரும் “ராக்கெட்ரி தி நம்பி விளைவு” என்ற படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார்.

மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக இயக்கி வருகிறார். இப்படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ராக்கெட்ரி – தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை சாம்.சி.எஸ்.தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் ஏற்கனவே மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் பொருளாதார ரீதியாகவும் விர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த படத்தில் நடிகர் மாதவன் மூன்று கேரக்டரில் நடிக்கிறார்.