மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது.

பணி: Stenographer Grade ‘C’ & ‘D’ Examination

தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் தட்டச்சு பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். ‘கிரேடு -டி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், ‘கிரேடு-சி’ பணிகளுக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: Stenographer Grade ‘C’ பணிக்கு 1.1.2019 தேதியின்படி 18 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Stenographer Grade ‘D’ பணிக்கு 1.1.2019 தேதியின்படி 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவுவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2018 @ 5 pm

கணினித் தேர்வு நடைபெறும் தேர்வு: 01.02.2019 to 06.02.2019

விண்ணப்பிக்கும் முறை: Staff Selection Commission என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக விண்ணப்பதாரர்கள் www.sscsr.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வு மையங்கள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…