மத்தியப் பிரதேசத்தில் 3000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீரென தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையில் மட்டும் 646 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பன்மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் மருத்துவர்களுக்காக சிறப்பு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளன.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜூனியர் மருத்துவர்கள் உதவித்தொகை உயர்வு, கொரோனாவல் பாதிக்கப்பட்டால் தங்களுக்கும், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி, கடந்த திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷைலேந்திர சிங் என்பவர் இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முகமது ரபீக் அகமது மற்றும் நீதிபதி சுஜோய் பால் ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா பேரிடரின் போது மருத்துவர்கள் போராட்டம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மருத்துவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை மீண்டும் தொடங்கவில்லை என்றால், மருத்துவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

[su_image_carousel source=”media: 24184,24185″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

இதையடுத்து நீதிபதிகளின் இந்த கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து 3 ஆயிரம் ஜுனியர் மருத்துவர்கள், தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர். அந்தந்த கல்லூரிகளின் டீனுக்கு தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய ஜுனியர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் அரவிந்த் மீனா கூறுகையில், “அரசு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். ஆனால் அதற்குப் பிறகு எதுவும் நடக்கவில்லை. அதனால் தான் நாங்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்பார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு மூத்த பத்திரிகையாளர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி