மதராஸ் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றத்தை முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அறிவித்த தினம் இன்று (14.01.2023).

விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாநிலத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்யக்கோரி 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல விவாதங்களை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.

சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம்., பேரறிஞர் அண்ணாத்துரை, பெருந்தலைவர் காமராசர், தோழர் ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சங்கரலிங்கனார் தொடர்ந்து உண்ணாவிரமிருந்து 13 அக்டோபர் 1956 அன்று உயிர் துறந்தார்.

1967 ஜூலை 18 ஆம் நாள் மதராஸ் மாநிலத்தை ‘தமிழ்நாடு’ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 23.11.1967ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதனையடுத்து 14.01.1969ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது சங்கரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.