பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். கடந்த வாரம் அவரது உடல்நிலை குறித்த வதந்தி கிளம்பிய நிலையில் வதந்தியை முறியடிக்கும் வகையில் அவர் தற்போது சுறுசுறுப்பாக தனது வழக்கமான பணிகளில் உள்ளார்.

இந்நிலையில் நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மணிரத்னத்தின் புதிய பார்ட்னரை அறிமுகம் செய்துள்ளார். பிரபல சாமியார் சத்குருதான் மணியின் பார்ட்ஞானர் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவரும் பார்ட்னராக இணைந்து கோல்ஃப் விளையாடுவார்கள் என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சுஹாசினி தெரிவித்த இந்த தகவலை அடுத்து மணிரத்னத்தின் ரசிகர்கள் கோல்ஃப் விளையாடும் பார்ட்னர்களின் புகைப்படத்தை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்ததால் அவர்கள் இணைந்த படத்தை பதிவிட்டுள்ளார்.