மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிக்க இருந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் ஒரு மல்டி ஸ்டார்ஸ் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். அமரர் கல்கி எழுதியுள்ள பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். மோகன்பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை லைகா புரொக்சன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த படத்தை தயாரிப்பது குறித்து மணிரத்னம் ஜியோ ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது.