மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “செக்க சிவந்த வானம்” மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் என பல முன்னனி நடிகர், நடிகைகள் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர்.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான “பொன்னியின் செல்வன்” நாவலை மையமாக கொண்டு படம் இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அவர்களை தொடர்ந்து, இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் கமிட் ஆக உள்ளனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி பாலிவுட் சூப்பர் ஸ்டார் இணையும் இப்படம் நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.