மக்கள் அரசை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக ” என்ற வலைதளத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

தகவல் தொழில் நுட்பவியில் துறையின் 2017-18ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் வலைதளம் வாயிலாக கருத்துக் கணிப்புகள், ஆய்வுகள், விவாதங்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது கருத்துக்களை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் அரசுக்கு தெரிவிக்க உதவும் வகையில் ‘நமது அரசு’ என்ற வலைதளம் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொதுமக்களுக்கும், அரசுக்குமிடையில் ஒரு புதிய நல்லுறவை ஏற்படுத்துவதோடு, அரசு இயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் ‘நமது அரசு’ (https://tamilnadu.mygov.in) வலைத்தளம் 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளமானது, கலந்துரையாடல், செயல்பாடுகள், தகவல்களை பரப்புதல், படைப்புத்தளம், கருத்துக்களம், கருத்துக் கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் வாக்கெடுப்புகளின் அடிப்படையில் அரசுச் சேவைகளை செம்மையாக செயல்படுத்த இது உதவும்.

மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக் கணிப்புகளைப் பெற்று, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும் என்று கூறப்படுகிறது.

பாஜக மகளிர் அணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்