மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.

சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ராணாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமன்னா, அதிதி ராவ் மற்றும் காஜலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

சிவராத்திரியையொட்டி பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகர் கார்த்திக், அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாட ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து தமன்னா, காஜல், நிஷா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

நிகழ்ச்சியின் பெரும்பகுதி நடிகை காஜல் ஆடிக் கொண்டே இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மகாசிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.