சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தடை விதித்த சென்னை ஐகோர்ட், இது தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன் மாணிக்கவேலை நியமித்து உத்தரவிட்டது. சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேலின் பணியை ஓராண்டு நீட்டிக்கவும் உத்தரவிட்டது.
 
பொன் மாணிக்கவேலின் விசாரனையில் அதிமுக வில் முக்கிய புள்ளிகள் பேரும் ஹிந்துவா தலைவர்களின் பேரும் அடிப்பட்டதால்
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிலை கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதால் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதாகவும், ஓய்வுபெற்ற அதிகாரியை பணி நீட்டிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது எப்படி சரியாகும் எனவும் தமிழக அரசு சார்பில் திவிரமாக வாதிடப்பட்டது.
 
இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி-யாக இருந்த பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டது செல்லும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த உத்தரவு ஆளும் அதிமுக வையும் மற்றும் பாஜக கட்சியையும் பெரிதும் பாதிப்பில் ஆழ்த்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ..