இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சிம்பு ஆகியோர்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் கதாநாயகனான ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கேரக்டர் வீரம், காதல், காமெடி மற்றும் தந்திரம் ஆகியவை கலந்து அமரர் கல்கி உருவாக்கியிருப்பார். இது முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர் என்பதால் கார்த்தி இதற்கு பொருத்தமாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

மேலும், டைட்டில் கேரக்டரான பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த தகவலும் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தை பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.