நடிகை கஸ்தூரி எப்போதும் இணையதளத்தில் சர்ச்சையான கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பவர். சமீபத்தில் இவர் பதிவு செய்த கருத்து ஒன்று அனைவரையும் கோபப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டுவிட்டரில், ஒருவர் திமுக எம்.எல்.ஏ ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டு சிறை என்ற தகவலை ஷேர் செய்ய, அதற்கு மற்றொருவர் பெரியார் வழி இது தானோ? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் “பெரியார் வழியில் தான் சிறுமியை காமகொடுமை செய்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் சென்று உள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் மகள் போன்றவரை பெண்டாளலாம் என்பது பெரியார் காட்டிய வழித்தானே?” என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பலரது மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.