வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் சர்ச்சையாகி உள்ளது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டெல்லியில் தொடர்ந்து 34 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீகாரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாய அமைப்பினரும் இடது சாரிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.

இந்த பேரணிக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை அருகே காவல் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் செய்வோரைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் விவசாயிகள் தடியடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஆளுநர் மாளிகையில் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்கங்களுடன் வரும் 30 ஆம் தேதி பேச்சுவார்த்தை- மத்திய அரசு