சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா உள்ளிட்ட சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.

அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் 49 ஏக்கர் பரப்பில் நிலம் மற்றும் பங்களா உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். இந்த சொத்துகளை சசிகலா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பேரில் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலா சொத்தை முடக்கி வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2,000 கோடி ரூபாய் அளவிற்கு பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

[su_image_carousel source=”media: 26352,26351″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. பையனூர் பங்களாவை இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக சசிகலா மிரட்டி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 1000 கோடி ரூபாய்க்கு மேல் பினாமி சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இது சம்பந்தமான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த முடக்கம் என்பது இனி தொடர்ச்சியாக நடைபெறும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதி செய்து கொடுத்த வழக்கு; கர்நாடக அரசுக்கு 30 நாள் கெடு