தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் நடிகை பாவனா. தமிழில் ஜெயம் ரவியுடன் இவர் நடித்த தீபாவளி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மலையாளத்திலும் மிக முக்கிய கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் பாவனாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென சிலர் பாவனாவை காரில் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவற்றை செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆறு மாதத்திற்குள் வழக்கை முடித்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றம் சார்பில் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியாக மலையாள முன்னணி நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். திலீப் தான் கூலிப்படையை ஏவி பாவனாவை பாலியல் துன்புறுத்தல் செய்யச் சொன்னதாக விசாரணையில் கூறப்பட்டது.

இதற்காக நடிகர் திலீப் சுமார் 3 மாதங்கள் ஜெயில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் விரைந்து இந்த வழக்கை முடிக்கும் வகையில் பல நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பாவனா தோழியான பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பீசன் இடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. நடிகர் திலீப்புக்கு எதிராக ரம்யா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் திலீப்புக்கு தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட சிலர் திலிப்க்கு ஆதரவாகவும் வாக்கு மூலம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க: திடீரென மாயமான சுஷாந்த் சிங் ட்விட்கள்.. எப்போது விலகும் மர்மங்கள்?