முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 5 வருடம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஜெயலலிதா ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடனான மோதல் காரணமாக அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, திடீரென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.

சாந்தினி அளித்த புகார் மனுவில், “முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 வருடங்களாக என்னுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் பலமுறை அவரை வலியுறுத்தினேன்.

அதற்கு மணிகண்டன், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்