மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘சக்தி சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவகின்றன. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு, பாலியல் கொடுமைகளை தடுக்க சக்தி சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கி, இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சக்தி சட்ட மசோதா குறித்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறியதாவது, “இந்த மசோதாவில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில், சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில், ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதாவது, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் முக புனரமைப்புக்காக இந்த தொகை வழங்கப்படும் என்றும், குற்றவாளியிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்கார வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என்றும், 15 நாட்களில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சோதனை அதிகபட்சம் 30 நாட்களில் முடிக்கப்பட வேண்டும். சக்தி சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதை நிரூபிக்கும்” என்று அனில் தேஷ்முக் கூறினார்.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் இரண்டு நாள் குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 14 முதல் தொடங்க உள்ளதாகவும், இந்த அமர்வில் சக்தி சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட உள்ளது. பின்னர், ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் தொடரும் சர்ச்சை