சுழற்சி முறையில் 50% மாணவர்களுடன், 6 அடி இடைவெளியில் இருக்கைகள் அமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் உள்ளிட்ட பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்க முன்வந்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது.

மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளின் காரணமாக, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுத்து பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் நிலையை அறிய வேண்டும் எனவும் கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் முதலிடம்- இந்தியா டுடே சர்வே